திருஷ்டகேது
Jump to navigation
Jump to search
திருஷ்டகேது (DHRISTAKETU) சேதி நாட்டு மன்னர் சிசுபாலனின் மகனாவார். கிருஷ்ணரின் அத்தை மகனான சிசுபாலனின் இறப்பிற்குப் பின்னர், திருஷ்டகேது சேதி நாட்டிற்கு மன்னராகி பாண்டவர்களின் நண்பரானர். திருஷ்டகேதுவின் சகோதரியை நகுலன் மணந்து கொண்டார். [1]
குருச்சேத்திரப் போரில் ஒரு அக்குரோணி படைகளுடன் பாண்டவர் அணியில் இணைந்து, கௌரவர்களுக்கு எதிராக போரிட்டவர். இறுதியில் துரோணரால் கொல்லப்பட்டார்.