ஆறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் ஆறாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்[தொகு]

தருமர் கட்டளைப்படி திருஷ்டத்யும்னன் பாண்டவர் படையை மகர வியூகமாக அணி வகுத்தான். கௌரவர் படை கிரௌஞ்ச வியூகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே ஆள்சேதம் பெரிய அளவில் நடந்தது. தனது தேரோட்டி கொல்லப்பட்டதும் துரோணர் தாமே கடிவாளம் பிடித்து பாண்டவர் படையை நாசம் செய்தார்.

பீமனுக்கும் துரியோதனனுக்கும் நேருக்கு நேர் போர் நடந்தது. துரியோதனன் பலமாக அடிபட்டு மயக்கமடைந்ததும் கிருபர் அவனை தன் தேரில் ஏற்றிக் கொண்டு காப்பாற்றினார். பீஷ்மரும் அச்சமயம் அங்குவந்து போரை நடத்தி பாண்டவர் படையை பெரிய அளவில் தாக்கினார்.

நிகழ்ந்த மரணங்கள்[தொகு]

• பாண்டவர் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள்

உசாத்துணை[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.