உள்ளடக்கத்துக்குச் செல்

விராடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விராடன் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன் மத்சய நாட்டின் மன்னர் ஆவான். துரியோதனன் ஆகியோரிடம் சூதாட்டத்தில் தோற்று மறைந்து வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் இவனது அரசவையில் ஒரு ஆண்டுக்காலம் வாழ்ந்தனர்.[1] இவனது பட்டத்து இராணி சுதேஷ்ணை ஆவார். இளவரசன் உத்தரனும், இளவரசி உத்தரையும் இவர்களது மக்களாவர்.

விராடனின் மைத்துனனும், விராட தளபதியுமான கீசகன் திரௌபதி மீது கொண்ட மையலால் வீமனால் கொல்லப்பட்டான். [2] உத்தரையை அபிமன்யு மணந்தார். -அபிமன்யு-உத்தரை தம்பதியரின் மகனே பரிட்சித்து ஆவார்.

குருச்சேத்திரப் போரில் விராடன் மற்றும் அவரது மகன் உத்தரன் ஆகியோர் துரோணரால் கொல்லப்பட்டனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. யுதிஷ்டிரன் விராடன் சந்திப்பு! - விராட பர்வம் பகுதி 7
  2. கீசகனைக் கொன்ற பீமன்! - விராட பர்வம் பகுதி 22ஆ


"https://ta.wikipedia.org/w/index.php?title=விராடன்&oldid=4256193" இலிருந்து மீள்விக்கப்பட்டது