உத்யோக பருவம்
தோற்றம்


உத்யோக பருவம் (சமக்கிருதம்: उद्योग पर्व) மஹாபாரதத்தின், 18 பருவங்களுள் ஐந்தாவது பருவமாகும். இதில் கிருஷ்ணனிடம் துரியோதனனும் அர்ஜூனனும் உதவி கோருவது. கௌரவர்கள் சார்பாக சஞ்சயன் மற்றும் பாண்டவர் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணர் சமாதானத் தூது செல்வது, படை திரட்டுவது ஆகியன அடங்கும்.
ஆதி பருவத்தில் வரும் பருவசங்கிரகப் பகுதியில் சொல்லியிருப்பது போல, 186 பகுதிகளும் 6,698 ஸ்லோகங்கள் அடங்கியது இந்தப் பருவமாகும்.[1]
சிறப்பு
[தொகு]- இப்பகுதியில் கிருஷ்ணர், சத்யபாமா, அர்ஜுனன், திரௌபதி ஆகியோர் போர்கள கூடாரத்தில் வீற்றிருக்க சஞ்சயன் கிருஷ்ணர் இடம் அனுமதி கோரி வருகை படலம் அப்போது அர்ஜுனன் நடக்க போகும் பாரத போரில் போரிடுவதற்கு போர் பயிற்சி எடுத்து கொண்டு இருக்க அர்ஜுனனை தன் அருகில் அழைத்த கிருஷ்ண பரமாத்மா ஒரு நீண்ட பஞ்சு மெத்தை நாற்காலியில் அமர்ந்திருக்க கிருஷ்ணர் தனது மடியில் தலை வைத்து படுக்குமாறு அர்ஜுனனை பணிக்க உடனே அவ்வாறே கிருஷ்ணர் மடியில் தலை வைத்து படுத்த அர்ஜுனன் தனது இரண்டு கால்களில் வலது காலை அர்ஜுனன் தனது மனைவி திரௌபதி மடியில் வைக்க சொல்ல இடது காலை கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமா மடியில் காலை வைக்க சொன்னவுடன் அர்ஜுனன் மற்றும் சத்யபாமா இருவரும் திகைத்து போனார்கள்.
- அதற்கு கிருஷ்ணர் தனது கண் ஜாடையில் சத்யபாமாவிற்கு விளக்கம் தர அதை ஏற்று கொண்டவள்.
- அதன் பிறகு அர்ஜுனன், கிருஷ்ணரின் குரு தர்மத்தை நிறைவேற்றும் விதமாக அர்ஜுனன் தனது காலை சத்யபாமா மடியில் வைத்தான்.
- அதன் பிறகு இந்த போர் கூடாரத்திற்குள் வந்த சஞ்சயன் அர்ஜுனன்–சத்யபாமா மடியில் காலை கிடத்தி வைத்து சயன நிலையில் உறங்கும் காட்சியை கண்டு திகைத்து போனான். (அதை காட்சியாக சஞ்சயன் வர்ணிக்கும் போது போர்களத்தில் பெரும் தங்கரத தேரையே மதயானை முட்டி தலைகீழாக தள்ளியதை போல் இருந்தது என காட்சியாக வர்ணித்தான்)
- பின்பு கிருஷ்ணர், அர்ஜுனன் காலை வைத்து உறங்கி கொண்டு இருக்கும் நிலையை இரு தேவியார் நோக்கி கேட்க திரௌபதி எனக்கு ஏதும் சிறமம் இல்லை என்று சொல்ல சத்யபாமா எனது மடியில் அர்ஜுனனின் கால்கள் வைத்திருப்பது உடலில் ஏற்பட்ட சுளுக்கின் வலி நீங்க உலக்கையை வைத்தார் போல் உள்ளது. என்று கூற மலையவே பெயர்கும் மாவீரன் அல்லவா நமது அர்ஜுனன் போர்களத்தில் அவனது கால்கள் நடக்கும் போதே உலகையே ஆட்டி படைக்கும் வலிமையள்ளவா அதனால் அவனது கால்கள் உலக்கையை போல் கனமாக தானே இருக்கும் என கிருஷ்ணர் சொல்ல மூவரும் சிரித்து கொண்டே அந்த இரவுகள் செல்ல அப்படலம் சென்றது.
- ஒப்பற்ற விதுர நீதி இந்தப் பருவத்தில்தான் வருகிறது. இந்த நீதி குருக்ஷேத்திரப் போருக்கு முன்பு விதுரரால், திருதராஷ்டிரனுக்குச் சொல்லப்பட்டது.
- விதுரனின் வேண்டுதலின் பேரில் சனத்குமாரர் திருதராட்டினுக்கு, இறவாப் பெரு நிலையை அடைய பிரம்ம வித்தை அருளப்பட்டது.