பாசுபத அஸ்திரம்
Jump to navigation
Jump to search
பாசுபதாஸ்திரம் (IAST: Pāśupatāstra, சமசுகிருதம்: पाशुपतास्त्र) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் ஆயுதமாகும். இதிகாசமான மகாபாரதத்தில் அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து இவ்வில்லினைப் பெற்று அசுரனைக் கொன்றதாக குறிப்பிடப்படுகிறது.[1]
புராணக் கதை[தொகு]
பாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என கண்ணன் கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார். கானகத்தில் அர்ஜூனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பாசுபத அஸ்திரத்தினைப் பெற்றுக் கொண்டார்.
கோவில்கள்[தொகு]
பாசுபத அஸ்திரத்தினைப் பெற அர்ஜூனன் தவம் மேற்கொண்ட தளமாக பல்வேறு இடங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
திருவேட்டக்குடி தளத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தமையாக அதன் தளபுராணம் கூறுகிறது. [2]
இவற்றையும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=384 அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்
- ↑ http://www.shivatemples.com/sofct/sct049.php திருமேனி அழகர் கோவில், திருவேட்டக்குடி