தஞ்சாவூர் பாலசரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:10, 15 செப்டெம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("Balasaraswati_Bharat_Natyam_Great_1949_(cropped).jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Dw no source since 1 September 2019.)
தஞ்சாவூர் பாலசரஸ்வதி
Tanjore Balasaraswati
பிறப்பு(1918-05-13)மே 13, 1918
சென்னை, இந்தியா
இறப்புபெப்ரவரி 9, 1984(1984-02-09) (அகவை 65)
சென்னை, இந்தியா
பணிபரதநாட்டியக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1925-1984

தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் தஞ்சை மாராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார்.

பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஐரோப்பார, கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என பாராட்டியுள்ளார்.[1] அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான்.

வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது. என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட் குறிப்பிட்டுள்ளார்.[2]

பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ என்ற நூலை டக்ளஸ் எம். நைட் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார், இது தமிழிலும் வெளிவந்துள்ளது.

விருதுகள்

மேற்கோள்கள்

  1. முனைவர் ம. செ. இரபிசிங் (அக்டோபர் 3 2017). "நடனத்தின் ஆணிவேராக திகழும் ஆடற்கலை ஆசான்கள்". தி இந்து தமிழ். 
  2. ஆசை (2018 மே 13). "பாலாவின் பெயர் மறைக்கப்படுவதில் அரசியல் இருக்கிறது!: டக்ளஸ் எம்.நைட் நேர்காணல்". செவ்வி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 மே 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  4. தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_பாலசரஸ்வதி&oldid=2802929" இலிருந்து மீள்விக்கப்பட்டது