வர்கீஸ் குரியன்
டாக்டர். வர்கீஸ் குரியன் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 26, 1921 கோழிக்கோடு, சென்னை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது கோழிக்கோடு, கேரளா) |
இறப்பு | 9 செப்டம்பர் 2012 நாடியாத், குஜராத், இந்தியா | (அகவை 90)
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | "இந்திய வெண்மை புரட்சியின் தந்தை" |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி கிண்டி பொறியியல் கல்லூரி மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் |
பணி | அமுல் நிறுவனத்தின் நிறுவனர் முன்னாள் தலைவர், என்டிடிபி மற்றும் ஆனந்த் ஊரக மேம்பாட்டு நிறுவனம் |
அறியப்படுவது | இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என பரவலாக பாராட்டப்பட்டார்.[1] |
விருதுகள் | உலக உணவுப் பரிசு (1989) பத்ம விபூசன் (1999) பத்ம பூசன் (1966) பத்மசிறீ (1965) ரமோன் மக்சேசே விருது (1963) |
வலைத்தளம் | |
www.drkurien.com |
வர்கீஸ் குரியன் ( நவம்பர் 26, 1921- செப்டம்பர் 09, 2012[2], கோழிக்கோடு, கேரளம்) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் பால்காரர் என்றும் கூறுவதுண்டு.
குசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் (GCMMF) தலைவராக இருந்தவர். அமுல் என்ற வணிகப்பெயருடன் விற்கப்படும் உணவுப்பொருட்களை நிருவகிக்கும் ஓர் உயர்நிலை கூட்டுறவு இயக்கமே குசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பாகும். 2006-07 ஆண்டிற்கான வருவாய் $ 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
உலகின் மிகப்பெரிய பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டமான வெள்ளைச் செயலாக்கத்தின் வடிவமைப்பாளராக குரியன் கருதப்படுகிறார். ஆனந்த் மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன் இந்தியாவின் வெண்புரட்சியை வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.
கல்வி[தொகு]
குரியன் கோபிசெட்டிபாளயத்திலுள்ள வைரவிழா மேனிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்தார். குரியன் சென்னை லயோலாக் கல்லூரியில் 1940ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். 1946ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.
பணிவாழ்வு[தொகு]
இந்தியா வந்தபிறகு, மே 1949ஆம் ஆண்டு ஆனந்த் அரசு பால்பண்ணையில் பொறியாளராகச் சேர்ந்தார். அதேநேரம் புதியதாகத் துவங்கப்பட்ட கூட்டுறவு பால்பண்ணை , கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தனியாரிடமிருந்த பொல்சன் பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருந்தது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது. மேலும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது.
விருதுகள்[தொகு]
பால்பண்ணை மேம்பாட்டிற்காக குரியனுக்கு இந்தியாவில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- 1963 ரமன் மக்சேசே பரிசு சமூக தலைமைக்காக [3].
- 1965 பத்மசிறீ
- 1966 பத்ம பூசண்
- 1986 கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து)
- 1986 வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்)
- 1989 உலக உணவுப் பரிசு
- 1993 ஆண்டின் பன்னாட்டு மனிதர் - உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா
- 1999 பத்ம விபூசண்
- 2007, கரம்வீர் புரஸ்கார்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Father of white revolution Verghese Kurien dies". The Times of India.
- ↑ "வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் காலமானார்". தினகரன் (10/09/2012). பார்த்த நாள் செப்டம்பர் 10, 2012.
- ↑ Ramon Magsaysay Award Citation ரமோன் மக்சேசே விருது Official website.
வெளியிணைப்புகள்[தொகு]
- amul.com
- THE AMUL SAGA by Verghese Kurien
- Dr. Kurien, 1989 World Food Prize Laureate
- http://www.ashoka.ca/fellows/social_entrepreneur.cfm
- Resignations
- "'Milkman' of India quits 'Taste of India'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 March 2006. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1457538,prtpage-1.cms.
- P.C. Mathew (4 September 2006). "Address the fears Kurien has voiced". தி இந்து. http://www.hindu.com/thehindu/op/2006/04/09/stories/2006040900681800.htm.