டி. வி. ராஜேஸ்வர்
டி. வி. ராஜேஸ்வர் | |
---|---|
![]() | |
1857 முதல் சுதந்திரப் போரின் 150 வது ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்வில் மீரட்டில் உள்ள கிரந்தி நினைவிடத்தில் டி.வி.ராஜேஸ்வர் மலர் அஞ்சலி செலுத்துகிறார், மே 06, 2007 | |
உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 8 சூலை 2004 - 27 மே 2009 | |
மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 2 மார்ச் 1989 – 6 பிப்ரவை 1990 | |
சிக்கிம் ஆளுநர் | |
பதவியில் நவம்பர் 1985 - மார்ச் 1989 | |
அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர் | |
பதவியில் 10 ஆகஸ்ட் 1983 – 21 நவம்பர் 1985 | |
இந்திய உளவுத்துறையின் தலைவர் | |
பதவியில் பிப்ரவரி 1980 - ஆகஸ்ட் 1983 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 28, 1926 , குருசாமிபாளையம் கிராமம், பழைய சேலம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 14 சனவரி 2018 புது தில்லி, இந்தியா | (அகவை 91)
டி. வி. ராஜேஸ்வர் (T.V. Rajeshwar) (ஆகஸ்ட் 28, 1926, சேலம், தமிழ்நாடு - 14 ஜனவரி 2018 புது தில்லி ) [1] தங்கவேலு இராஜேஸ்வர் முதலியார் எனப்படும் இவர் இந்தியக் காவல் பணி அதிகாரியாகவும், இந்திய உளவுத்துறை தலைவராகவும் இருந்தார். மேலும், சிக்கிம், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றினார். இவருக்கு 2012இல் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. இவர் 14 ஜனவரி 2018 அன்று இறந்தார் [2]
தொழில்[தொகு]
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இராசிபுரம் வட்டத்தில் குருசாமிபாளையம் என்ற கிராமத்தில் நெசவாளரான மாரிமுத்து முதலியாருக்குப் பிறந்தார். உள்ளூரிலிருக்கும் செங்குந்தர் மகாஜன பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவர் 1949 இல் இந்தியக் காவல் பணித்தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐதராபாத்திலுள்ள நிஜாமாபாத், ராய்ச்சூர், குண்டூர் ஆகிய மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுமாறு இந்திய அரசு இவருக்கு உத்தரவிட்டது. பின்னர் ஐதராபாத்து காவல் துணை ஆணையராக பல ஆண்டுகள் பணியாற்றினார். [3] [4]
ஆளுநர் பணி[தொகு]
1983 ஆகஸ்ட் முதல் 1985 நவம்பர் வரை அருணாச்சல பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக இருந்தார். நவம்பர் 1985 முதல் மார்ச் 1989 வரை சிக்கிமின் ஆளுநராக பணியாற்றினார். இவர் 20 மார்ச் 1989 முதல் 1990 பிப்ரவரி 7 வரை மேற்கு வங்காளத்தின் ஆளுநராகவும், 8 ஜூலை 2004 முதல் 2009 ஜூலை 27 வரை உத்தரப்பிரதேச ஆளுநராகவும் இருந்தார். [5]
குடும்பம்[தொகு]
இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் சுஜாதா சிங் முன்னாள் இந்திய வெளியுறவு அதிகாரியும், ஜெர்மனிக்கான இந்திய தூதரும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளருமாவார் .
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "T.V Rajeswar (1926-2018): Officer who reported Emergency excesses but won Indira Gandhi's trust". The Indian Express. 16 January 2018. 19 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards". pib. 27 January 2013. 27 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Shri T.V. Rajeswar". Uttar Pradesh Vidhan Sabha website.
- ↑ Gurusa Seithi Malar. Gurusamipalayam Sengundhar Mahajana Higher secondaryschool. https://archive.org/details/gurusamypalayam-sengundhar-school/mode/1up.
- ↑ "Shri T.V. Rajeswar". Uttar Pradesh Vidhan Sabha website. 21 May 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2010 அன்று பார்க்கப்பட்டது.