முரளி மனோகர் ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரளி மனோகர் ஜோஷி
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
பதவியில்
19 மே 1998 – 22 மே 2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்எஸ். ஆர். பொம்மை
பின்னவர்அர்ஜுன் சிங்
இந்தியாவின் உள்துறை அமைச்சர்
பதவியில்
16 மே 1996 – 1 சூன் 1996
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்எசு. பி. சவாண்
பின்னவர்தேவ கௌடா
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
பதவியில்
19 மே 1999 – 22 மே 2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
பின்னவர்கபில் சிபல்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்
பின்னவர்சத்யதேவ் பச்சோரி
தொகுதிகான்பூர்
பதவியில்
16 மே 2009 – 16 மே 2014
முன்னையவர்ராஜேஷ் குமார் மிஸ்ரா
பின்னவர்நரேந்திர மோதி
தொகுதிவாரணாசி
பதவியில்
1996-2004
முன்னையவர்சரோஜ் துபே
பின்னவர்ரேவதி ராமன் சிங்
தொகுதிஅலகாபாத்
பதவியில்
1977–1980
முன்னையவர்நரேந்திர சிங் பிஷ்ட்
பின்னவர்ஹரீஷ் ராவத்
தொகுதிஅல்மோரா
ராஜ்ய சபா
பதவியில்
5 சூலை 1992 – 11 மே 1996
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1934 (1934-01-05) (அகவை 90)
அல்மோரா, பிரித்தானிய இந்தியா (தற்போது உத்தராகண்டம், இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தர்லா ஜோஷி
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம் (MSc, PhD)
விருதுகள்பத்ம விபூசண் (2017)
கையெழுத்து

முரளி மனோகர் ஜோஷி ஒர் இந்திய அரசியல் பிரமுகர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் 1991 முதல் 1993 வரை அக்கட்சியன் தேசியத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இவரின் இந்திய அரசியல்-சமூகப் பார்வைக்காகவும், ஆர்எஸ்எஸ்(RSS) உடனான இவரின் தொடர்புக்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.

தனி வாழ்க்கை[தொகு]

முரளி மனோகர் ஜோஷி 1934 ஜனவரி 5-ம் நாள் தற்போதைய உத்ராகண்ட் மாநிலத்தின் குமோன் மலைப்பகுதியில் (Kumaon Hills) நைனிடாலில் பிறந்தார். இயற்பியலில் நிறமாலையியலில்(Spectroscopy) முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் அதன் பிறகு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆசானாகப் பணிபுரிந்தார்[சான்று தேவை]. ஆர்எஸ்எஸ் உடன் ஏற்பட்டத் தொடர்பின் காரணமாக பின்னாளில் அரசியலுக்கு வந்தார்[சான்று தேவை].

கல்வி[தொகு]

ஜோஷி தனது தொடக்கக் கால கல்வியை சாந்த்பூர், பிஜ்னோர் மற்றும் அல்மோரா ஆகிய இடங்களில் கற்றார். இளம் அறிவியல்/அறிஞர் (B. Sc) பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலை அறிவியல்/அறிஞர் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். தனது முனைவர் பட்டத்தையும் அலகாபாத் பல்கலைக்கழகத்திலேயே நிறமாலையியலில் முடித்தார். மேலும், ஒர் இயற்பியல் ஆய்வுக் கட்டுரையை இந்தியில் எழுதி வெளியிட்டுள்ளார்[1].

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 1992 பாபரி மசூதி இடிப்பு வழக்கில் மும்மரமாக பங்காற்றினார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆய்வுக் கட்டுரை". Archived from the original on 2011-06-26. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 15, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரளி_மனோகர்_ஜோஷி&oldid=3568159" இலிருந்து மீள்விக்கப்பட்டது