பி. சாம்பமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. சாம்பமூர்த்தி (P. Sambamurthy, 14 பிப்ரவரி 1901 - 1973) தமிழகத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞராவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்பூந்துருத்தியில் 1901 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று பிறந்த சாம்பமூர்த்தி, வழக்குரைஞருக்கான பி. ஏ., பி. எல்., பட்டம் பெற்றவர். முதலில் பிடில் பொத்து கிருஷ்ணய்யா என்பவரிடம் பிடில் வாசிப்பினைக் கற்றார். பின்னர் மனத்தட்டை துரைசாமி ஐயர் என்பவரிடம் வாய்ப்பாட்டு கற்றார்.

இசை வாழ்க்கை[தொகு]

இசையாசிரியர் பணி[தொகு]

  • 1928 ஆம் ஆண்டில் சென்னை குயின்மேரீசு கல்லூரியில் இசையாசிரியராக பணியேற்பு
  • 1937 - 1961 காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராக பணி
  • 1961 - 1964 காலகட்டத்தில் சங்கீத வித்யாலயாவின் இயக்குனராக பணி
  • திருப்பதி, காசி, டெல்லி பல்கலைக்கழகங்களில் இசைத் துறைத் தலைவராக பணி

எழுதிய நூல்கள்[தொகு]

இசை, இசையியல் குறித்து ஏறத்தாழ 50 நூல்களை இவர் எழுதினார்.

இவரின் மாணவர்கள்[தொகு]

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

மறைவு[தொகு]

1973 ஆம் ஆண்டு தனது 72 ஆம் வயதில் சாம்பமூர்த்தி காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

பக்கம் எண்:640 & 641, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சாம்பமூர்த்தி&oldid=3563201" இருந்து மீள்விக்கப்பட்டது