தயாரஞ்சனி
Appearance
தயாரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகமும் ஆகும்.
இலக்கணம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF.svg/250px-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF.svg/250px-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF.svg.png)
ஆரோகணம்: | ச ரி2 ம1 ப த2 ச |
அவரோகணம்: | ச நி2 த2 ம1 க3 ரி2 ச |
- இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ஆரோகணத்தில் காந்தாரம், நிஷாதம் வராது. அவரோகணத்தில் பஞ்சமம் வராது.
- இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது உபாங்க இராகம் ஆகும்.
- இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ-ஷாடவ" இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996