நாதக்குறிஞ்சி
நாதக்குறிஞ்சி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 நி2த2 நி2ப த2 நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2த2 ம1 க3 ம1 ப க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் தைவதம், பஞ்சமம் ஆகிய சுரங்களும், அவரோகணத்தில் மத்திமம், பஞ்சமம் என்பனவும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
குறிப்பு[தொகு]
- ↑ Music Handbook - Raga Index -N 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.