சிவரஞ்சனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவரஞ்சனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

சிவரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ரி22 ப த2 ச்
அவரோகணம்: ச் த2 ப க2 ரி2
  • இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.
  • இவ்விராகத்தின் ரிஷப, காந்தார மூர்ச்சனைகளே முறையே ரேவதி, சுநாதவினோதினி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Music Handbook - Raga Index -S 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவரஞ்சனி&oldid=2499035" இலிருந்து மீள்விக்கப்பட்டது