பூர்வி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்வி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 க3 ம1 ப த1 நி3 த1 ச் |
அவரோகணம்: | ச் நி3 த1 ப ம1 த1 ம1 க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருக்கிறது. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். இதில் ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்குமாறி வருவதுடன், அவரோகணத்தில் தைவதமும், மத்திமமும் ஒன்றுக்கு மேற்பட ஒழுங்கு மாறி வருகின்றன. இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
சுத்த மத்திம இராகங்கள் |
| ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிரதி மத்திம இராகங்கள் |
| ||||||||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்வி&oldid=977901" இருந்து மீள்விக்கப்பட்டது