திவ்யமணி
Appearance
திவ்யமணி கருநாடக இசையின் 48ஆவது மேளகர்த்தா இராகமாகும்.[1] முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 48ஆவது இராகத்திற்குப் பெயர் ஜீவந்திகா.[1][2][3]
இலக்கணம்
[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம2 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம2 க2 ரி1 ஸ |
- வசு என்றழைக்கப்படும் 8ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் ரூபவதி (12) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
[தொகு]வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | லீலகானு ஜூசே | தியாகராஜர் | ஆதி |
கிருதி | அப்பா முருகா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |