காந்தாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தாமணி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 61வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 61வது இராகத்திற்கு குந்தலம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

காந்தாமணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம23 ரி2
  • இது ருத்ர என்றழைக்கப்படும் 11வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் மாரரஞ்சனி (25) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம சுரம் முறையே மானவதி (05) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பாலிந்துவோ தியாகராஜர் ஆதி
கிருதி புவனேஷ்வரி பாஹி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா திரிபுட
கிருதி நாதசுகம் கோடீஸ்வர ஐயர் ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தாமணி&oldid=1352044" இலிருந்து மீள்விக்கப்பட்டது