மாரரஞ்சனி
Appearance
மாரரஞ்சனி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 25வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 25வது இராகத்திற்கு ஷராவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இலக்கணம்
[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம1 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம1 க3 ரி2 ஸ |
- இது பாண என்றழைக்கப்படும் 5வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- இது ஒரு விவாதி மேளம்.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் காந்தாமணி (61) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம சுரம் முறையே வனஸ்பதி (04) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
[தொகு]வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | மனஸா ஸ்ரீராமுநி | தியாகராஜர் | ஆதி |
கிருதி | ஷராவதி | முத்துசாமி தீட்சிதர் | திஸ்ர ஏகம் |