ஜாலவராளி
Appearance
ஜாலவராளி இராகம் கருநாடக இசையின் 39ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39ஆவது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இலக்கணம்
[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம2 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம2 க1 ரி1 ஸ |
- ரிஷி என்றழைக்கப்படும் 7ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் கானமூர்த்தி (03) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
[தொகு]வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | அனாத ரக்ஷகா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | மாதவ தய்ய | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | ஆதி |