சுபபந்துவராளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபபந்துவராளி இராகம் கருநாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.

இலக்கணம்[தொகு]

சுபபந்துவராளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம22 ரி1
  • வசு எனப்படும் 8 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • காந்தாரத்தை அசைக்காமல் பாட வேன்டும்.
  • கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
  • இது தேனுக இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
  • இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் தைவதத்தை ஷட்ஜமாகக் கொண்டால் சலநாட்டை (36) என்ற மேளம் ஒலிக்கும்.

உருப்படிகள்[தொகு]

ஜன்ய இராகங்கள்[தொகு]

சுபபந்துவராளியின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபபந்துவராளி&oldid=2162208" இலிருந்து மீள்விக்கப்பட்டது