சுத்தானந்த பாரதியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுத்தானந்த பாரதி
Shuddhananda Bharati
80-ஆவது அகவையில் சுத்தானந்தர்
பிறப்பு(1897-05-11)11 மே 1897
சிவகங்கை, தமிழ்நாடு
இறப்பு7 மார்ச்சு 1990(1990-03-07) (அகவை 92)
சோழபுரம், சிவகங்கை அருகில்

சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுத்தானந்த பாரதியார் எனப் பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் தொடங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாகத் தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு[தொகு]

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

விருதுகள்[தொகு]

எழுதிய நூல்கள்[தொகு]

வ.எண் வெளியான ஆண்டு நூலின் பெயர் பதிப்பகம் பக்கம் குறிப்பு
01 1938 ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், சிங்கப்பூர் 66 மொழிபெயர்ப்பு
02 1940 பேரின்பம் அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை சமஸ்தானம் 64 கவிதைகள்
03 1942 ஞானி எமர்ஸன் அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா 36 வாழ்க்கை வரலாறு
04 1948 மே நாவலர் பெருமான் தமிழ்நாடு: புதுயுக நிலையம், புதுச்சேரி 234
05 உடலுறுதி யோக சமாஜம், வடலூர் 140 ஐந்தாம் பதிப்பு
06 1962 அக்டோபர் விஞ்ஞான மணிகள் சிவகங்கை வெளியீடு, சிவகங்கை 106 வாழ்க்கை வரலாறு
07 பாரத சக்தி மகா காவியம்
08 யோக சித்தி
09 அருட்செல்வம்
10 கவிக் கனவுகள்
11 கீர்த்தனாஞ்சலி
12 நவரஸ நடனாஞ்சலி
13 பாரத கீதம்
14 தமிழ்க் கனல்
15 ஆத்ம சோதனை
16 ஏழைபடும் பாடு
17 இளிச்சவாயன்
18 அன்னை
19 இவளும் அவளும்
20 நாகரிகப் பண்ணை
21 பகவத் கீதை
22 இல்லற ஒழுக்கம்
23 பெரியவாள் கதை
24 அருட்பெருமான்
25 சிவானந்த ஜோதி
26 இதுதான் உலகம்
27 தயானந்த ஜோதி
28 பாப்பா பாட்டு
29 கலிமாவின் காதல்
30 Sri Aurobindo
31 Integral Yoga
32 The Gospel of Perfect Life
33 Yogi Shuddhananda
34 2005 பொது நெறி
35 கல்விக்கதிர்
36 1967 தியான சாதனம் சுத்தானந்த யோக சமாஜம், யாழ்ப்பாணம் 48
37 1948 நாவலர் பெருமான் புதுயுக நிலையம், புதுச்சேரி 236
38 பாட்டாளி பாட்டு ஆத்மஜோதி நிலையம்‎ 100 கவிதைகள்
39 1975 சோதனையும் சாதனையும் சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை 434 தன்வரலாறு, சுய வாழ்க்கை வரலாறு
40 1937 திருக்குறளின்பம் அன்புமலர் 260
41 1946 தேசியகீதம் பாரத சக்தி நிலையம், புதுவை 140 115 பாடல்கள்
42 1962 ஆத்மநாதம் ஆத்மஜோதி நிலையம், நாவிலப்பட்டி, இலங்கை‎ 231 பாடல்கள்

இயற்றிய தமிழிசைப் பாடல்களின் பட்டியல்[தொகு]

  • 'எப்படிப் பாடினரோ …' - கர்நாடக தேவ காந்தாரி.[1]
  • 'தூக்கிய திருவடி துணை -(சங்கராபரணம்).

மேற்கோள்கள்[தொகு]

  1. "'அடுத்த ஸ்லாட்டுக்கு தயார்!' எனும் தலைப்பில் 'தினமணி' நாளிதழில் ( டிசம்பர் 29, 2012 - சென்னைப் பதிப்பு) எழுதப்பட்ட கட்டுரை". Archived from the original on 2013-06-13. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.

வெளி இணைப்புகள்[தொகு]

நூலகம் திட்டத்தில் சுத்தானந்தர் இயற்றிய நூல்கள்[தொகு]

தளத்தில்
சுத்தானந்த பாரதியார் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தானந்த_பாரதியார்&oldid=3697780" இலிருந்து மீள்விக்கப்பட்டது