ஹம்சானந்தி
Appearance
ஹம்சானந்தி 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனாச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ம2 க3 ரி1 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ப என்னும் ஸ்வரம் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு ஷாடவ இராகம்.
- இது ஒரு உபாங்க இராகம்.
இதர அம்சங்கள்
[தொகு]- இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
- பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.
- கருணைச்சுவையை வெளிப்படுத்தும் இவ்விராகம் மாலை நேரத்தில் பாடுவதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
- இந்துஸ்தானி இசையில் இந்த இராகம் பூர்யசோகினி என்று அழைக்கப்படுகின்றது.
உருப்படிகள்
[தொகு]- கிருதி : "நானே உன்னை" - ஆதி - மாயூரம் வேதநாயகம்பிள்ளை.
- கிருதி : "மாதவமாய" - ஆதி - பாபநாசம் சிவன்.
- கிருதி : "சொல்லித்தான் தெரியுமா" - ஆதி - அம்புஜம் கிருஷ்ணா.
- கிருதி : "பன்னிருகை வேலனே" - ரூபகம் - தண்டபாணி தேசிகர்.
- திருப்புகழ் : "நிறைமதி" - ஆதி - அருணகிரிநாதர்.
ஹம்சானந்தி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
[தொகு]- மான்கண்டேன் மான்கண்டேன்... :- ராஜரிஷி
- மின்சாரப்பூவே மின்சாரப்பூவே... :- படையப்பா
- ராத்திரியில் பூத்திருக்கும்... :- தங்கமகன்
- பொட்டு வைத்து பூ முடிக்கும்... :- நினைத்தேன் வந்தாய்
மேற்கோள்கள்
[தொகு]