கோலாகலம் (இராகம்)
கோலாகலம் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
இந்த இராகத்தில் சட்சம் (ச), பஞ்சமம் (ப), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ப ம1 க3 ம1 ப த2நி3 ச |
அவரோகணம்: | ச நி3 த2ப ம1 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூர்ணச" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமம், பஞ்சமம் என்பன ஒழுங்கு மாறி வருவதால் இது இருசுர வக்கிர இராகம் ஆகும்.