இந்திரப்பிரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1),சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச க1 ம1 த1 நி1 ச |
அவரோகணம்: | ச நி1 த1 ம1 க1 ச |
- இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரப்பிரியா&oldid=1054235" இருந்து மீள்விக்கப்பட்டது