கௌதமி (இராகம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
கௌதமி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), பஞ்சமம் (ப1),சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 க1 ப த1 நி1 ச |
அவரோகணம்: | ச நி1 த1 ப க1 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதமி_(இராகம்)&oldid=1002395" இருந்து மீள்விக்கப்பட்டது