அமிர்தவர்ஷிணி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தவர்ஷிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2][3]
இலக்கணம்
[தொகு]
ஆரோகணம்: | ஸ க3 ம2 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம2 க3 ஸ |
- இது ஒரு ஔடவ இராகம்.
- ரிஷபம், தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
- அமிர்தவர்ஷிணி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
திரையிசைப் பாடல்கள்
[தொகு]இந்த இராகத்தில் அமைக்கப்பட்ட திரை இசைப் பாடல்:
- "தூங்காத விழிகள் இரண்டு" - அக்னி நட்சத்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
- ↑ Rāganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
- ↑ "amrithavarshini". ragasurabhi. Retrieved 26 February 2025.
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தவர்ஷிணி&oldid=4215861" இலிருந்து மீள்விக்கப்பட்டது
மறைந்த பகுப்பு: