தயாரஞ்சனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயாரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகமும் ஆகும்.

இலக்கணம்[தொகு]

தயாரஞ்சனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
தயாரஞ்சனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ச ரி21 ப த2
அவரோகணம்: ச நி2213 ரி2
  • இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகணத்தில் காந்தாரம், நிஷாதம் வராது. அவரோகணத்தில் பஞ்சமம் வராது.
  • இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது உபாங்க இராகம் ஆகும்.
  • இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ-ஷாடவ" இராகம் எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாரஞ்சனி&oldid=1987078" இலிருந்து மீள்விக்கப்பட்டது