ஜெயசம்வர்தனி
Appearance
ஜெயசம்வர்தனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 17வது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சூர்யகாந்தம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg/250px-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg/250px-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.svg.png)
இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), காகளி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச க3 ம1 ப த2 நி3 ச் |
அவரோகணம்: | ச் நி3 ப ம1 க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ-சாடவ" இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996