விஜயலட்சுமி பண்டித்
விஜயலட்சுமி நேரு பண்டிட் | |
|---|---|
விஜயலட்சுமி நேரு பண்டிட் | |
| ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் | |
| பதவியில் செப்டம்பர் 15, 1953 – செப்டம்பர் 21, 1954[1] | |
| முன்னையவர் | Lester B. Pearson |
| பின்னவர் | Eelco N. van Kleffens |
| மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 1967-1971 | |
| முன்னையவர் | ஜவஹர்லால் நேரு |
| பின்னவர் | வி. பி. சிங்க் |
| தொகுதி | ஃபுல்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 ஆகஸ்ட், 1900 |
| இறப்பு | 1 திசம்பர், 1990 |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| துணைவர் | ரஞ்சித் சீதாராம் பண்டிட் |
| பிள்ளைகள் | நயன்தாரா சாஹல் |
| சமயம் | இந்து சமயம் |
| கையெழுத்து | |
விஜயலட்சுமி பண்டிட் (Vijaya Lakshmi Pandit), (ஆகஸ்ட் 18, 1900 - டிசம்பர் 1, 1990), இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.[2]
அரசியல்
[தொகு]இந்திரா காந்தியைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.
வகித்த பதவிகள்
[தொகு]இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். விடுதலைக்குப் பின்னர் ரஷ்ய தூதரகத்தில் பொறுப்பு வகித்தார். பின்னர் அமெரிக்காவிலுல் இங்கிலாந்திலும் பணியாற்றினார். [3]
1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
நூல்கள்
[தொகு]The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.
குடும்ப வாழ்க்கை
[தொகு]மோதிலால் நேரு தொடங்கிய செய்திதாளின் முதன்மையாசிரியராக இருந்த சையத் ஹூசேன் என்பவரை இளமைக்காலத்தில் இவர் காதலித்தார். இவர் அம்மா அதனை எதிர்த்ததால் அக்காதலை கைவிட்டார். 1920ஆம் ஆண்டில் மோதிலால் நேருவிடம் சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரை மணந்தார். இவர்கள் ரீடா, லேகா, தாரா என்னும் நயந்தரா சாகல் என்னும் குழந்தைகளை ஈன்றனர். [3]
இவரது மகள் நயந்தரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ http://worldleadersindex.org/InternationalOrganisations/UN.html
- ↑ http://www.winentrance.com/general_knowledge/vijaya-lakshmi-pandit.html
- ↑ 3.0 3.1 அம்மா... அண்ணா... இந்திரா... குங்குமச்சிமிழ் 1983 சூன் பக். 59-61