மகா உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகா உபநிடதம்
உரை நாராயணனைப் பற்றி விவாதிக்கிறது
தேவநாகரிमहा
உபநிடத வகைவைணவம்[1]
தொடர்பான வேதம்சாம வேதம்[2]
அத்தியாயங்கள்6
பாடல்களின் எண்ணிக்கை549[3]
அடிப்படைத் தத்துவம்வைணவ சமயம்

மகா உபநிடதம் ( சமக்கிருதம்: महा उपनिषद् , Maha Upanishad) என்பது ஒரு சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும்.[4][5] இந்த உரை சாமான்ய உபநிடதம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உரை இரண்டு பதிப்புகளில் உள்ளது. ஒன்று சில தொகுப்புகளில் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[6] மற்றொன்று சாம வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[5] அதர்வண வேதப் பதிப்பு குறுகியதாகவும், உரைநடையிலும் உள்ளது.[7][8] சாம வேத பதிப்பு ஓரளவு கவிதை வசனங்களில் உள்ளது. [9]

வைணவ உபநிடதம் விஷ்ணுவை மிக உயர்ந்தவராகவும், பிரம்மாவிற்கும் மேலானவராகவும் விவரிக்கிறது.[1] [10] இருப்பினும், இரண்டு குழுக்களும் நூல்கள் அனைத்து இந்து கடவுள்களின் மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. மேலும் அவை ஒரே ஆன்மா - பிரம்மம் என்று வலியுறுத்துகின்றன.[10] உபநிடதம் வைணவ மற்றும் வேதாந்தக் கருத்துகளின் ஒத்திசைவை முன்வைக்கிறது. மேலும் "வசுதைவ குடும்பகம் " அல்லது "உலகம் ஒரே குடும்பம்" என்ற போதனைக்காக குறிப்பிடத்தக்கது.[11]

வரலாறு[தொகு]

மகா உபநிடதத்தின் தேதி அல்லது ஆசிரியர் பற்றி தெரியவில்லை, ஆனால் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட வைணவ உபநிடதங்களில் இது மிகவும் பழமையானது என்று ஜெர்மன் இந்தியவியலாளர் டியூசன் கருதுகிறார்.[12]

இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகளும் மகோபநிஷத் என்ற தலைப்பில் காணப்படுகின்றன.[9][13] அனுமனுக்கு இராமனால் விவரிக்கப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 61 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[14] சுல்தான் முகமது தாரா சிக்கோவால் 1656 இல் ஓபனேகாத் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட உபநிடதங்களின் தொகுப்பில் 50 உபநிடதங்களின் பாரசீக மொழிப்பெயர்ப்புடன், மதம் பற்றிய சிறந்த புத்தகமாக முன்மொழியப்பட்ட இது 16வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[15] வட இந்தியப் பதிப்பான. கோல்புரூக்கின் 52 உபநிடதப் பதிப்பில் இந்த உபநிடதம் 9 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. [16] நாராயணனின் பிப்லியோதிகா இண்டிகா பதிப்பில், தென்னிந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் பட்டியலில் உபநிடதம் 9 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[17]

உள்ளடக்கம்[தொகு]

உபநிடதம் விஷ்ணுவை சாங்கியக் கொள்கைகளுக்கு மேல், சிவனுக்கும், பிரம்மனுக்கும் மேலான மனிதனாக முன்வைக்கிறது.[1] இந்த உபநிடத உரை சைவ உபநிடதங்களான அதர்வசிகா உபநிடதம், அதர்வசிரசு உபநிடதம் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. மேலும் விஷ்ணு மற்றும் பிரம்மாவை விட சிவனே உயர்ந்தவர் என்று வலியுறுத்துகிறது.[18] எவ்வாறாயினும், இரு குழுக்களும், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் (அல்லது மகேசுவரன், உருத்திரன்) ஆகிய மூன்றையும் விவரிப்பதில் மிகுந்த மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றது. மேலும் அவற்றை ஒரே உலகளாவிய ஆன்மா - பிரம்மம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக அடையாளப்படுத்துகின்றது.[10]

"உலகம் ஒரு குடும்பம்" என்ற மகா உபநிடதத்தின் வசனம் இந்திய நாடாளுமன்றத்தின் நுழைவு மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Deussen 1997, ப. 799.
  2. Tinoco 1996, ப. 89.
  3. AG Krishna Warrier (1953), Maha Upanishad, Theosophical Society, Madras, Online
  4. Deussen 1997, ப. 557, 561–567.
  5. 5.0 5.1 Tinoco 1996, ப. 87–89.
  6. Deussen 1997, ப. 566–567.
  7. Deussen 1997, ப. 799–801.
  8. Max Muller, Alphabetisches Verzeichniss der Upanishads கூகுள் புத்தகங்களில், Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft: ZDMG, Volume 19, page 151
  9. 9.0 9.1 Hattangadi 2000.
  10. 10.0 10.1 10.2 Deussen 1997, ப. 779–782, 799–801.
  11. BP Singh and Dalai Lama XIV Bstan-ʼdzin-rgya-mtsho (2008), Bahudhā and the Post 9/11 World, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195693553, page 51
  12. Deussen 1997, ப. 799 with footnotes.
  13. Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA498, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, pages 291, 498–499
  14. Deussen 1997, ப. 556–557.
  15. Deussen 1997, ப. 558–59.
  16. Deussen 1997, ப. 561.
  17. Deussen 1997, ப. 564–65.
  18. Deussen 1997, ப. 779, 799.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_உபநிடதம்&oldid=3847944" இலிருந்து மீள்விக்கப்பட்டது