புருச தத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புருச தத்துவம் (Purusha) (சமசுகிருதம் puruṣa, पुरुष) வேத மற்றும் உபநிடத காலங்களில் சிக்கலான இத்தத்துவம் தோன்றியது. ஆதாரங்கள் மற்றும் வரலாறுகளின் அடிப்படையில், புருசன் என்ற தத்துவம், பிரபஞ்ச படைப்புக்குக் காரணமானவன் என்றும், நான் என்ற ஆத்மா என்றும், அறிவு வடிவினன் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.[1]

வேதம்[தொகு]

ரிக் வேத புருஷ சூக்தத்தில் புஷசனின் மனதால் தோன்றிய, இரண்யகர்பன் எனும் பிரம்மன், சீவராசிகளுடன் கூடிய இப்பிரபஞ்சத்தை படைத்தார் என குறித்துள்ளது.

வேதாந்தம்[தொகு]

வேதாந்தம் எனும் உபநிடதங்களில் பிரபஞ்சத்தை படைத்தது புருசன் என்ற தத்துவம் விளக்கப்படவில்லை. ஆனால் பிரபஞ்ச படைப்பிற்கு ஈஸ்வரன் காரணமானவன் என விளக்கப்பட்டுள்ளது. [2] மாயையுடன் கூடிய பிரம்மமாகிய ஈஸ்வரனே அனைத்து பிரபஞ்சத்திற்கும், உயிரினங்களுக்கும் காரணம் எனக் கூறுகிறது.

சாங்கியம்[தொகு]

கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாத சாங்கியம், பிரகிருதி என்ற (இயற்கை/சடப்பொருள்) மற்றும் புருஷன் (அறிவுள்ள பொருள்) ஆகியவைக் குறித்து பேசுகிறது. அறிவும் உணர்வு வடிவான புருஷன் எதுவும் செய்வதில்லை என்றும்; சடத்தன்மை கொண்ட பிரகிருதியே (இயற்கையே) அனைத்தையும் படைத்துக் கொள்கிறது என சாங்கியம் கூறி புருஷனின் மேன்மையை விளக்கவில்லை. [3]

புருடன் அறிவுள்ள பொருள் என்றும், பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. பிரபஞ்சமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருச_தத்துவம்&oldid=2145598" இருந்து மீள்விக்கப்பட்டது