உள்ளடக்கத்துக்குச் செல்

சபரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபரர் அல்லது சபரசுவாமி (Śabara), ஜைமினி ரிஷி எழுதிய பூர்வ மீமாம்சை சூத்திரங்களுக்கு கிமு 57ல் உரை எழுதியவர். சபரசாமியின் பூர்வ மீமாம்ச சூத்திர உரைகளுக்கு குமாரிலபட்டர் விரிவான விளக்க உரை எழுதினார். சபரசாமி பதஞ்சலி முனிவருக்கு பிந்தியவரும், வாத்சாயனருக்கு முந்தியவரும் ஆவார்.

மீமாம்ச சூத்திரத்திற்கான தனது உரையில், தர்மத்தை அறிவதற்குப் பிரத்யட்சம் (புலன்காட்சி), அனுமானம், ஊகம் அல்லது ஒப்புமை ஆகியவை ஆதாரங்களாக இருக்க முடியாது என்று சபரர் எழுதுகிறார். அறிவதற்கான மற்ற வழிகள் அனைத்தும் பிரத்யட்சத்தைச் சார்ந்தே உள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார். தர்மத்தைப் புரிந்துகொள்ள பிரத்யட்சத்தைப் பயன்படுத்த முடியாததால், அறிவதற்கான மற்ற வழிகளையும் பயன்படுத்த முடியாது. இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், தர்மத்தை அறிவதற்கு சாட்சியம், குறிப்பாக வேதங்கள் மட்டுமே ஒரே வழி என்று சபரர் வாதிடுகிறார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Taber, John; Kumārila (2005). A Hindu critique of Buddhist epistemology: Kumārila on perception; the 'Determination of perception' chapter of Kumārila Bhaṭṭa's Ślokavārttika. RoutledgeCurzon Hindu studies series (1. publ ed.). London: RoutledgeCurzon. p. 21. ISBN 978-0-415-33602-4.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Mimamsa.org
  • Shabara Bhasya, Translated to English by Ganganath Jha, All 3 Volmunes, Archive.org ebook [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரர்&oldid=4455827" இலிருந்து மீள்விக்கப்பட்டது