ஆதி சங்கரர்
ஆதி சங்கரர் | |
---|---|
![]() | |
இயற்பெயர் | சங்கர |
பெற்றோர் | சிவகுரு ஆர்யாம்பிகை[1] |
தலைப்புகள்/விருதுகள் | அத்வைதம் நிறுவியவர், இந்து மறுமலர்ச்சி, சன்மார்க்க மதம் (ஆறுமதங்கள்) நிறுவியவர் |
தத்துவம் | அத்வைதம் |
குரு | கோவிந்த பகவத் பாதர் |
மேற்கோள் | ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம் ("வயிற்றை நிரப்ப இவ்வளவு வேஷம்" போடுகிறான் மனிதன்) |
ஆதிசங்கரர் (Adi Shankara, பொ. ஊ. எட்டாம் நூற்றாண்டு), இன்றைய கேரளத்திலுள்ள காலடி எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு இணையருக்கு மகனாகத் தோன்றிய மெய்ஞான வல்லுநர் ஆவார்.
இளமைப் பருவத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.
இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிறுவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றினார்.
பீடங்களும் சீடர்களும்
[தொகு]
சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். தமது 32-ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.[2]
துறவறம்
[தொகு]தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
வாதங்கள்
[தொகு]கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.
கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.
ஆதி சங்கரர் நிறுவிய மடங்கள்
[தொகு]ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.
முதல் பீடாதிபதி | திசை | பீடம் | மகாவாக்கியம் | வேதம் |
---|---|---|---|---|
பத்மபாதர் | கிழக்கு | கோவர்தன மடம் | பிரக்ஞானம் பிரம்மம் | ரிக் வேதம் |
சுரேஷ்வரர் | தெற்கு | சிருங்கேரி சாரதா மடம் | அஹம் பிரம்மாஸ்மி | யசுர் வேதம் |
அஸ்தாமலகர் | மேற்கு | துவாரகை காளிகா மடம் | தத்துவமசி | சாம வேதம் |
தோடகர் | வடக்கு | ஜோஷி மடம் | அயமாத்மா பிரம்மம் | அதர்வண வேதம் |
ஆதி சங்கரர். தெற்கு. காஞ்சி
( அவரே பீடாதிபதி)
நிர்வாணாஷ்டகம்
[தொகு]நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும். இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து இறுதியில் பிரம்மமே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.[3] ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.
காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ மாலதி சந்திரசேகரன், ed. (20 ஏப்ரல் 2018). ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்!. தினமணி நாளிதழ்.
{{cite book}}
: CS1 maint: year (link) - ↑ http://zeenews.india.com/home/adi-shankara-his-life-and-mutts_456122.html
- ↑ "ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம்! - மந்திரங்கள், இறைவழிபாடு". temple.dinamalar.com. Retrieved 2025-05-02.