அங்கரிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிரீசர் வேத கால மகரிஷிகளுள் ஒருவர்.[1][2] இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா . இவர்களுக்கு கண்வர், உதத்யா, சம்வர்தனா, பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர். பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.[3] புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்க்ள்[தொகு]

  1. Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. பக். 29–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-341421-6. https://books.google.com/books?id=DH0vmD8ghdMC. 
  2. George M. Williams (2008). Handbook of Hindu Mythology. Oxford University Press. பக். 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-533261-2. https://books.google.com/books?id=N7LOZfwCDpEC&pg=PA55. 
  3. John Brough (2013). The Early Brahmanical System of Gotra and Pravara: A Translation of the Gotra-Pravara-Manjari of Purusottama-Pandita. Cambridge University Press. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-62398-9. https://books.google.com/books?id=QZhtAAAAQBAJ&pg=PA66. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கரிசர்&oldid=2711794" இலிருந்து மீள்விக்கப்பட்டது