பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

பொய்யூர் என்று வழங்கப்படும் இவ்வூர் வடக்குப் பொய்கைநல்லூர், தெற்குப் பொய்கைநல்லூர் என்று இரண்டாக உள்ளது. நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஈச்சங்குப்பம்-அக்கரப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 6 கிமீ தொலைவில் உள்ள வடக்குப் பொய்கைநல்லூரில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் நந்திநாதேசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009