உள்ளடக்கத்துக்குச் செல்

புதுக்குடி சுவேதாரண்யேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவேதாரண்யேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:புதுக்குடி
கோயில் தகவல்
மூலவர்:சுவேதாரண்யேசுவரர்
தாயார்:ஆனந்தவல்லி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

புதுக்குடி சுவேதாரண்யேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

கும்பகோணம்-எரவாஞ்சேரி சாலையில், எரவாஞ்சேரிக்கு முன்பாக புதுக்குடி உள்ளது. புதுக்குடி என்னும் பெயரில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மற்றொரு ஊர் உள்ளதால் இவ்வூரை பதினெட்டு புதுக்குடி என்றழைக்கின்றனர்.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் சுவேதாரண்யேசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

திருச்சுற்றில் சுப்பிரமணியர், பைரவர், சூரியன், விநாயகருக்கான சன்னதிகள் உள்ளன. இடது புறத்தில் இறைவி உள்ளார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009