திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள சிவன் பெருமான் திருக்கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டது. [1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2] [3]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி [1]

வரலாறு[தொகு]

புராணங்கள் கூற்றுப்படி கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கிழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.

தலப்பெருமைகள்[தொகு]

இத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலங்கள்.

பதஞ்சலி முனிவர்(கி.மு.150)[தொகு]

வியாக்கிரபாதர்(புலிக்கால் முனிவர்)[தொகு]

காசியபர்[தொகு]

கயிலாசநாதர் கோயில்[தொகு]

இத்தலத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கயிலாசநாதர் திருக்கோயில் காலத்தால் முற்பட்ட கற்றளியாகும். அழகே உருவான இக்கோயிலின் ஆதிதளம் காந்தார அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆதிதளத்தின் ஒவ்வொரு சுவரும் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டு, ஒடுக்கங்களுடன் அமைந்துள்ளன. [4]

தீர்த்தம்[தொகு]

பிரம்ம தீர்த்தம் - அம்மனின் ஆலயத்தின் வடப்புறம் உள்ளது. நான்கு அழகிய படித்துறைகளயும்,வற்றாத நன்னிரையும் கொண்டது, இத்தீர்த்ததினால் பிரம்மன் அருள்மிகு ஈஸ்வரனை அர்ச்சித்ததால் பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. பகுள தீர்த்தம் - ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கூடிய குளம் ஆகும்.

தேரோட்டம்[தொகு]

இவ்வூரில் ஒவ்வோராண்டும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  2. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  3. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  4. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கோயிற் கட்டடக்கலை - டாக்டர் இரா கலைக்கோவன் - டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
  5. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, தினத்தந்தி, 26 மார்ச் 2015