அவல் பூந்துறை புஷ்பவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவல் பூந்துறை புஷ்பவனேசுவரர் கோயில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

ஈரோட்டிலிருந்து அறச்சலூர் வழியாகச் செல்கின்ற தாராபுரம் சாலையில் பூந்துறை என்னுமிடத்தில் உள்ளது. அவல் பூந்துறை, பூந்துறை எனப்படுகின்ற இரு பெயர்களும் ஒன்றேயாகும்.

இறைவன்,இறைவி[தொகு]

கருவறையில் உள்ள மூலவர் புஷ்பவனேசுவரர் ஆவார். இறைவி பாகம் பிரியாள் ஆவார்.இறைவி சன்னதி முன் மண்டபத்துடன் தனிக் கோயிலாக அமைந்துள்ளது. [1]

திருச்சுற்று[தொகு]

திருச்சுற்றில் நவக்கிரகங்கள், சனி, பைரவர், தான்தோன்றீஸ்வர லிங்கத்திருமேனி, தர்மசம்வர்த்தனி, சூரியன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. வன்னி மரத்தடியில் விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009