பெரம்பூர் பிரமபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரம்பூர் பிரமபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

தரங்கம்பாடி வட்டம் பெரம்பூரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர் பிரம்பில் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் பிரமபுரீசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். முன்பு இக்கோயில் பின்புறம் இருந்ததாகவும், நாளடைவில் சிதலமாகிய நிலையில் இறைவனையும், இறைவியையும் எடுத்துவந்து சுப்பிரமணியர் கோயிலில் வைத்துவிட்டதாகவும் கூறுகின்றனர். [1]

அமைப்பு[தொகு]

மூலவராக சுப்பிரமணியர் உள்ளார். வெளிச்சுற்றில் விநாயகர், கந்தபுரீசுவரர், லடசுமி நாராயணப்பெருமாள் உள்ளனர். அடுத்து பிரமபுரீசுவரர், ஆனந்தவல்லி திருமேனிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009