கஞ்சாறு ஆனந்த தாண்டேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஞ்சாறு ஆனந்த தாண்டேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

மயிலாடுதுறை-சீர்காழி சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது. கஞ்சாறு, கஞ்சாறூர் என்றும் ஆனதாண்டவபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ஆனந்த தாண்டேசுவரர் ஆவார். இறைவி பிருகந்நாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. ஆஞ்சநேயர், பைரவர், நவக்கிரகம், சனீசுவரர், சூரியன், சந்திரன் சன்னதிகளும் உள்ளன. இத்தலம் மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த தலமாகும். அவருடைய திருமேனியும், அவருடைய மகளின் திருமேனியும் இக்கோயிலில் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009