கீழையூர் செம்மலைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழையூர் செம்மலைநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

நாகப்பட்டினம்-வேதாரண்யம்/திருத்துறைப்பூண்டி சாலையில், வலப்புறமாக திருத்துறைப்பூண்டி சாலையில் கருங்கண்ணியை அடுத்து கீழையூர் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் செம்மலைநாதர் ஆவார். இறைவி வண்டமரும் பூங்குழலாள் ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், இறைவி சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009