திருப்புல்லாணி
திருப்புல்லாணி | |
— கிராமம் — | |
அமைவிடம் | 9°16′59″N 78°49′30″E / 9.282923°N 78.824978°Eஆள்கூறுகள்: 9°16′59″N 78°49′30″E / 9.282923°N 78.824978°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருப்புல்லாணி இது இந்தியா , தமிழ்நாடு , இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.
இவ்வூரின்சிறப்பு[தொகு]
இங்கு அமைந்துள்ள திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.[4]
இராமாயணக் குறிப்புகள்[தொகு]
சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்த போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார் இராமர். தற்போது இத்திருத்தலத்தில் ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம். எனவே சீதை இல்லாமலும், லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லாமலும் ஆஞ்சநேயர் மட்டும் உள்ள திருத்தலம்.மூலஸ்தான சுவரில் இலங்கைக்கு பாலம் அமைக்க ஆலோசனை கூறிய சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருப்புல்லாணி