தனுஷ்கோடி

ஆள்கூறுகள்: 9°10′49″N 79°24′54″E / 9.1802276°N 79.4150162°E / 9.1802276; 79.4150162
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள்
தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள்
தனுஷ்கோடி
இருப்பிடம்: தனுஷ்கோடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°10′49″N 79°24′54″E / 9.1802276°N 79.4150162°E / 9.1802276; 79.4150162
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


2 மீட்டர்கள் (6.6 அடி)

குறியீடுகள்

தனுஷ்கோடி (Dhanushkodi) இந்தியாவின், தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும். இது பாம்பனுக்கு தென் கிழக்கே, இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.

இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கோதண்டராமர் கோயில் இராமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

  • வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்றனர். இது சங்க காலத்துக்குப் பிந்திய வழக்கு. (வில் = தனுஷ்)
  • கோடி என்பது முனை. வானைத் தொடும் முனை 'கோடு'. அதுபோலக் கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் 'கோடி'
  • 'கோடி' என்பது இதன் சங்க காலப் பெயர். 'தொன்முது கோடி' என்று அது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • தனுஷ்கோடியையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் இராமர் கட்டியதாக கருதப்படும் இராமர் பாலம் இன்றும் காணப்படுகிறது.

சங்ககாலத்தில் தனுஷ்கோடி[தொகு]

கவுரியர் ஆட்சி
இது 'வென்வேற் கவுரியர்' என்று போற்றப்பட்டுள்ள அக்காலப் பாண்டியருக்கு உரியது.
விழாவில் மகளிர் தழையாடை
அவ்வூரில் வாழ்ந்த அக்கால மகளிர் விழாக் காலங்களில் தங்களது ஆடைக்கு மேல் பூந்தழை ஆடை அணிந்துகொள்வார்களாம். அதில் நீண்ட காம்போடு கோத்த நெய்தல் பூக்கள் தொங்குமாம்.
கானலம்பெருந்துறை
அங்குக் 'கானலம் பெருந்துறை' என்று வழங்கப்பட்ட இடத்தில் ஞாழல் மரமும், புன்னை மரமும் பூத்துக் குலுங்குமாம். அப்பகுதி காதலர் மகிழும் இடமாகவும் திகழ்ந்திருக்கிறது.
இராமன் ஆலமரத்தடியில் தவம்
அங்கிருந்த ஓர் ஆலமரத்து விழுதுகளுக்கிடையே அமர்ந்துகொண்டு வெல்போர் இராமன் அருமறை மந்திரங்களை ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்தானாம். அப்போது அங்கே அமைதி நிலவிற்றாம். பறவைகள் கூட ஒலிக்கவில்லையாம்.
  • ஒருத்தி சொல்கிறாள் \ திமிலில் ஏறிப் பரதவர் கடலில் வேட்டைக்குப் போய் வலை போட்டுப் பிடித்துவந்த மீன்களை, இலை தனித்தனியாகப் போட்டு மகளிர் பகுத்துக்கொண்டிருந்தபோது இந்த ஒருத்தியின் கள்ள உறவைப்பற்றிப் பேசிக்கொண்டார்களாம். அவர்கள் வாயடைந்துபோவார்கள் என்கிறாள் அவள். அவளது திருமணத்துக்குப் பின்னர் இராமன் மறை சொன்னபோது வாயடைந்த பறவைகளைப்போல வாயடைந்து போவார்களாம்.[3]

தனுஷ் கோடி புயல் அழித்த கதை[தொகு]

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர்.[4] அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.

இடிந்த நிலையில் உள்ள தனுஷ்கோடி தொடருந்து நிலையம்

புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டிடங்களும் மட்டுமே. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியின் தொடருந்து நிலையத்தை கடல் கொண்டது. தொடருந்து தண்டவாளம், பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

போக்குவரத்து[தொகு]

9.5 கி.மீ நீளமுள்ள சாலையில் தேசிய நெடுஞ்சாலை - முகுந்தாரையர் சாதிரமிலிருந்து தனுஷ்கோடி வரையான 5 கி.மீ. மற்றும் தனுஷ்கோடிக்கு அரிச்சமுனைக்கு 4.5 கி.மீ. சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனம் மூலம் செல்லலாம். அது அசோகாவின் தூண்களில் முடிவடையும். இந்தியாவின் பிரதான மண்டபத்தை தனுஷ்கோடிக்கு இணைக்கும் ஒரு குறுகிய இருப்புப் பாதை இருந்தது. 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை குறுகிய இருப்புப் பாதை கிளை கோடு அழிக்கப்பட்டபோது, சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை போட் மெயில் விரைவுத் தொடருந்து ஓடியது. 2003 ஆம் ஆண்டில், இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 16 கிலோமீட்டர் (9.9 மைல்) தொடருந்து பாதையை மீண்டும் அமைப்பதற்கு இரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரெயில்வே திட்டம் ஒன்றை அனுப்பியது. 2010 இல் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய இரயில் பாதை சாத்தியமாவதற்கு திட்டமிடல் கமிஷன் முயன்றது. 2016 வரை, தனுஷ்கோடி கடற்கரை செல்வதற்கு கடற்கரை ஓரம் நடந்தோ அல்லது ஜீப்பிலோ செல்வார்கள் . 2016 ஆம் ஆண்டில், முகுந்தாராயர் சாதிராம் கிராமத்திலிருந்து தனுஷ்கோடி கடற்கரை ஒரு சாலை அமைக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் கடல் இணைப்பு[தொகு]

பாம்பன் பாலம்

iராமேஸ்வரம் தீவையும் இந்தியாவையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவில் ஒரு பொறியியல் அதிசயமாக இருக்கிறது. மும்பையில் முடிக்கப்பட்ட பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்புக்குப் பிறகு, இது இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கடல்-பாலம் ஆகும். இந்த பாலத்தின் குறுக்கே உள்ள தொடருந்து பயணம் வியப்பூட்டும் காட்சிகளை அளிக்கிறது. மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இழிவான சூறாவளியில் சேதமடைந்த பாலம் 48 நாட்களுக்குள் மறுகட்டமைக்கப்பட்டது ஒரு சாதனை என்று கருதப்படுகிறது.

தற்போதைய நிலை[தொகு]

தற்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து தினமும் நாட்டுப்படகு, சிறிய வத்தைகளில் சென்று மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து செல்கின்றனர். இராமேஸ்வரம் கோயிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன, 45 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பெருமளவில் தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர்.[5]

சுற்றுலா இடங்கள்[தொகு]

தனுஷ்கோடி கடற்கரை[தொகு]

தனுஷ்கோடி கடற்கரை (முகுந்தா ரயர் சாத்ரம் @ மூண்டிரம் சத்திரம்) கடற்கரை 15 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முகுந்தர்யார் சத்திரம் என்றழைக்கப்படும், உயர் அலை கடல்கரை விளையாடுவதற்கு பாதுகாப்பான பகுதி. கடல் அலைகள் மிக அதிகமாக இருப்பதால் (அதிகபட்ச உயரம் 12 அடி என பதிவு செய்யப்பட்டுள்ளது) இது நீச்சல் தெரியாதவர்களுக்கு ஏற்றது அல்ல. இந்த கடற்கரையில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது, பரபரப்பான அனுபவமாக உள்ளது.

அரிச்சல் முனை[தொகு]

அரிச்சல் முனை இரண்டு கடல்களின் (வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல்) ஒன்றிணைவு மற்றும் இராமேசுவரம் முடிவடைவிடமே ஆகும், தனுஷ்கோடியில் உள்ள இந்த இடம் இந்தியா மற்றும் இலங்கையின் நில எல்லை ஆகும், இங்கிருந்து இலங்கை சுமார் 15 கி.மீ. இரு கடல்களின் இணைப்புப் புள்ளி அரிச்சல் முனை நீச்சல் அல்லது குளிப்பதற்கு ஆபத்து என்று கருதப்படுகிறது.

கோதண்டராமர் கோயில்[தொகு]

இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் கோதண்டராமர் கோயில் உள்ளது.

தனுஷ்கோடியின் சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • உயர் அலைகள் கொண்ட கண்கவர் நீல கடல் காட்சி
  • கடற்கரையில் பைக் சவாரி
  • கடல் கரையில் விளையாடி குளிக்கலாம்
  • கடற்கரையில் அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நடை
  • மீதமுள்ளவர்களின் பார்வை
  • கடலை இணைத்தல் (ரமேஸ்வரத்தின் தெற்காசிய முடிவு)
  • குளிர்காலத்தில் (அக்டோபர், நவம்பர்) பருவங்கள் கடற்புலிகள், பறவைகள் மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் பறவைகள் தனுஷ்கோடி (கோதண்ட ராமரின் கோவிலுக்கு அருகிலுள்ள அரண்மனையில்) வருகின்றன.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கடுவன் மள்ளனார் பாட்டு \ அகநானூறு 70
  4. Gallery of Wrecks Crashes & Derailments Danushkodi, India 1964
  5. "53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷ்கோடி&oldid=3834388" இலிருந்து மீள்விக்கப்பட்டது