காரங்குடி சதுப்பு நிலம்
Appearance
காரங்குடி சதுப்பு நிலம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகே வங்காள விரிகுடாவை ஒட்டிய காரங்காடு ஊராட்சியின் கடற்பரப்பில் இராமநாதபுரம் வனச்சரகம் சார்பில் சதுப்பு நிலக்காடுகள் வளர்க்கப்படுகிறது. இச்சதுப்புக் காடுகளை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு காரங்காட்டில் சதுப்பு நிலக் காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சூலை 2019 அன்று நடைபெற்றதுடன், காரங்காடு அமல அன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடற்கரை ஓரங்களிலும், ஆற்று முகத்துவாரங்களிலும் மாங்ரோவ் விதைகள் நட்டனர்.[1][2]