1951ம் ஆண்டு இந்த தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர். எனவே முதல் இரு பிடித்த வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1957ல் நாமக்கல் தொகுதியில் இருந்து ஒரு பொது வேட்பாளரும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் அல்லாத வி. காளியப்பன் 2ம் இடம் பிடித்தாலும் மூன்றாம் இடம் பிடித்த தாழ்த்தப்பட்ட இன காங்கிரசு வேட்பாளர் எம். பி. பெரியசாமி 24240 (18.77%) சட்டமன்றத்துக்கு சென்றார்.
1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் வி. கே. ஆர். இராஜாராம் 28606 (24.24%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த எம். துரைராஜ் 7474 (6.33%) வாக்குகளும் பெற்றனர்.
2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் அமுதா 22401 வாக்குகள் பெற்றார்.
1977- 2006 வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதியாக இருந்த இத்தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் பின் 2010 முதல் பொது தொகுதியாக மாறியுள்ளது.