முதற்பக்கக் கட்டுரைகள்
|
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பயன்படுத்தலாம். மழைநீர் வீடு அல்லது நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்தும் அல்லது இதற்காகத் தயார் செய்யப்பட்டத் தரைவழியாகவும் சேகரிக்கப்படும். சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, அதிகச் செலவு பிடிக்காத சிக்கனமான நீர் ஆதாரம் ஆகும். மழைநீர் சேகரிப்பு ஒருங்கியம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியதும் ஆகும். கட்டடங்களின் மேற்கூரைகளில் சேகரிக்கப்படும் மழைநீரானது, பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக சுத்திகரிப்புக்கு உட்படுத்தத் தேவையில்லாததாகவும் இருக்கிறது. வேறுவகை நீராதாரம் இல்லாதபட்சத்தில், ஆண்டு மழைப்பொழிவு 200மிமீக்கு அதிகமுள்ள இடங்களில் குடும்பத்தின் குடிநீர் தேவைக்காக மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது ஆகும்.

கணிமி என்பது ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும். நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும். பின்னாளில் நிலைக்கரு உயிரினமான ஓர் உயரணு இயீசுட்டில் (yeast) 2 மைக்ரோன் (2 micron) கணிமி கண்டுபிடிக்கப்பட்டது. இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை. கணிமிகள் குழலிணைவு (conjugation) என்னும் நிகழ்வு மூலம் ஒரு உயிரணுவில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு இன உயிரணுக்கள் இல்லாமல் அல்லது பாலுறவு இல்லாமல் மரபணு கடத்தப்படும் நிகழ்வுக்கு பாலுறவு சாரா மரபணு கடத்தல் (horizontal gene transfer) எனப்பெயர். கணிமிகள் தாம் இருக்கும் உயிரினத்துக்கு ஓர் எதிப்புத் தன்மையை அல்லது குழலிணைவு என்னும் நிகழ்வுக்கு உதவி புரிபவையாக இருக்கின்றன.
மேலும் கட்டுரைகள்..
|
உங்களுக்குத் தெரியுமா
|

- ருவாண்டா இனப்படுகொலை என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.
- வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.
- இன்று இணையத்தில் பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.
- சுழியக் கழிவு என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.
- தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.
தொகுப்பு
|
|
|
செய்திகளில் 
|
|
|
விக்கிப்பீடியர் அறிமுகம்
|
சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.
|
இன்று...
|
|
|
|