கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதற்பக்கக் கட்டுரைகள்
|
கோலாலம்பூர், மலேசியாவின் தலைநகரம் ஆகும். மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டுள்ளது. இது மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சிப் பகுதிகளில் ஒன்று. இந்நகரவாசிகள் கேலைட்சுகள் என பொதுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர். 243 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த நகரின் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். மலேசியாவின் நாடாளுமன்றமும் மலேசிய மன்னர் யங் டி-பெர்துவன் அகோங்கின் அரண்மனையான ஸ்தான நகராவும் இங்கு உள்ளன. 1990கள் முதல் இந்நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள், அரசியல் மாநாடுகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் ஆக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இருந்து வருகின்றன. மேலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும். . மேலும்...

தாமசு மாண், 1929ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர் ஆவார். அவர் ஆக்கிய பல புதினங்களும் குறியீட்டு முறையிலும் முரணான முறையிலும் காப்பிய வகையில் உருவாக்கப்பட்டவை ஆகும். தாமசு மாண் செருமானிய, விவிலிய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும், செருமானிய அறிஞர்களாகிய யோஹான் வோல்ஃப்காங் ஃபோன் கேத்தே, பிரீட்ரிக் நீட்சே, ஆர்த்தர் ஷோப்பனாவர் போன்றோரின் சிந்தனைவழி தொடர்ந்தும், அவற்றை நவீனப்படுத்தி, ஐரோப்பிய, செருமானிய கலாச்சாரத்தைப் பகுப்பாய்வு செய்து விமர்சிக்கின்றார். அடோல்ஃப் ஹிட்லர் செருமனியில் பதவியைப் பிடித்தபோது, தாமசு மாண் செருமனியை விட்டு சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். 1939இல் இரண்டாம் உலகப் போர் வெடித்த கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். 1952ஆம் ஆண்டு அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினார். தாமசு மாண் "நாடுகடத்தப்படுநிலை இலக்கியம்" என்னும் எழுத்து வகைப் படைப்புக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். . மேலும்...
மேலும் சில கட்டுரைகள்...
|
உங்களுக்குத் தெரியுமா?
|
|
தொகுப்பு
|
|
|
செய்திகளில் 
|
|
|
விக்கிப்பீடியர் அறிமுகம்
|
க. மதனாஹரன், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திசம்பர் 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தகவல் தொழில்நுட்பம், கணிதம், சதுரங்கம், துடுப்பாட்டம், மென்பொருள்கள் சார்ந்த துறைகளில் பங்களித்து வருகின்றார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் சில: ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை, சாம்பியன்ஸ் லீக் இருபது20, கடவுச் சொல், டிஷ் டிவி, பை மாறிலியின் அண்ணளவாக்கங்கள், விண்டோஸ் துருவி, சிப்பாய் (சதுரங்கம்). தமிழ் விக்சனரியிலும் மொழிபெயர்ப்பு விக்கியிலும் சிறிதளவில் பங்களித்து வருகின்றார். தமிழ் விக்கிமீடியாத் திட்டங்களில் பன்முகப் பங்களிப்போரில் மதனாஹரன் மிக இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து வயது நிறைந்த இவர் தற்பொழுது பாடசாலையில் பயின்று வருகிறார்.
|
இன்றைய நாளில்...
|
|
|
|
சிறப்புப் படம்
|
 |
தெப்பக்குளம் இந்து சமயக் கோயில்களின் உள்ளேயோ அல்லது வெளியிலோ அமைக்கப்படுகிறது. தெப்பக் குளங்கள் பொதுவாக சதுர வடிவில்தான் அமைக்கப்படுகின்றன. அவை இந்து சமய விழாக்களுடன் தொடர்புடையதாய் இருக்கின்றன. படத்தில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் காட்டப்பட்டுள்ளது.
தொகுப்பு
|
|
|
உங்கள் கருத்துகள் | பிற மொழி விக்கிப்பீடியாக்கள்