வலைவாசல்:வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


வரலாறு



Pyramids of Gerzah-2.jpg

வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.


சிறப்புக் கட்டுரை



மகாராணா பிரதாப் - ரவி வர்மாவின் ஓவியம்
மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப்சிங் மேவாரின் இந்து அரசராவார், அது வடமேற்கு- இந்தியாவில் அமைந்திருக்கும் ஒரு மாகாணமாகும். ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை அவர் சார்ந்தவராவார். ராஜபுத்திரரிகளின் ஆக்ரோஷமான பெருமை மற்றும் சுய-மரியாதை இவைகளுக்கு ஒருமாதிரி உருவகமாகத் திகழ்ந்த, பிரதாப் அத்தகைய வம்சத்தினர் பற்பல நூற்றாண்டுகளாக விழையும் அருங்குணங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். 25 சகோதரர்கள் மற்றும் 29 சகோதரிகளுக்கு, மூத்தவராக பிரதாப், கும்பால்கர் இடத்தில் (தற்போது ராஜஸ்தானில் ராஜச்மன்ட் ஜில்லாவில் உள்ளது) பிறந்தார். அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் II மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள்.
தொகு  

செய்திகளில் வரலாறு


வரலாற்று நபர்கள்



AlexandertheGreatbyGeorgeSStuart.jpg
பேரரசன் அலெக்சாண்டர் (கிமு 356-323) கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் மன்னன். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான். தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான். இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். அலெக்சாண்டர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். பன்னிரண்டு ஆண்டு காலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான்.
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...

தொகு  

இதே மாதத்தில்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வரலாறு&oldid=1423512" இருந்து மீள்விக்கப்பட்டது