அரியலூர் மாவட்டம்
| அரியலூர் மாவட்டம் | |
அரியலூர் மாவட்டம்:அமைந்த இடம் |
|
| தலைநகரம் | அரியலூர் |
| மிகப்பெரிய நகரம் | அரியலூர் |
| ஆட்சியர் |
எம்.ரவிக்குமார் இஆப |
| காவல்துறைக் கண்காணிப்பாளர் |
|
| பரப்பளவு | 1934.01Sq. Km. |
| மக்கள் தொகை |
752481 (2011) |
| வட்டங்கள் | 3 |
| ஊராட்சி ஒன்றியங்கள் | 6 |
| நகராட்சிகள் | 2 |
| பேரூராட்சிகள் | 2 |
| ஊராட்சிகள் | 201 |
| வருவாய் கோட்டங்கள் | 2 |
| வருவாய் கிராமங்கள் | 195 |
| திருவள்ளூர் மாவட்ட இணையதளம் | http://www.ariyalur.tn.nic.in/ http://tnmaps.tn.nic.in/default.php |
சனவரி 1, 2001 ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர், உடையார் பாளையம் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், அரியலூர், உடையார் பாளையம் மற்றும் செந்துறை ஆகிய ஆகிய 3 வட்டங்களும் (தாலுக்காக்களும்) பிரிக்கப்பட்டு புதிய அரியலூர் மாவட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.
சிமென்ட் தவிர நிலக்கரி அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக கிடைக்கிறது இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அணல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது.
1.இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நதிகளாவன : கொள்ளிடம், மருதையாறு, வெள்ளாறு.
2.இம்மாவட்டத்தின் இரு முக்கிய நகரங்கள் : அரியலூர், ஜெயங்கொண்டம்.
3.தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சாலை மூலம் சென்று வர அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தொடர் வண்டி மூலம் சென்று வர அரியலூர் தொடர் வண்டி நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது, மேலும் சில தொடர்வண்டி சந்திப்புகள் செந்துறை, ஓட்டக்கோவில்,ஈச்சங்காடு,ஆர்.எஸ். மாத்தூர், வெல்லூர்.
சுற்றுலா தளங்கள் [தொகு]
கரைவெட்டி பறவைகள் காப்பகம் கங்கைகொண்டசோழபுரம்-பிரகதீஸ்வரர் ஆலயம் http://www.indiadestinationtours.com/destinations/f3d5d_2085388-Gangaikondacholapuram_temple-Thanjavur[1].jpgகலியுக வரதராஜ பெருமாள் ஆலையம்கலியுக வரதராஜ பெருமாள்
சட்டமன்றத் தொகுதிகள் [தொகு]
| தொகுதி | வேட்பாளர் | கட்சி |
|---|---|---|
| அரியலூர் | துரை மணிவேல் | அதிமுக |
| ஜெயங்கொண்டம் | செ. குரு | பாமக |
|
||||||||||||||||||||||||||
|
||||||||||||||