மிருகண்டா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிருகண்டா அணை என்பது திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள அணையாகும். இதன்மூலம் காந்தாபாளையம், சிறுவள்ளூர், நல்லான் பிள்ளைபெற்றாள், கேட்டவரம்பாளையம், வில்வாரணி, எலத்தூர், அம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 3,190 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.[1]

தமிழ்நாடு நீர்வளத் துறையில் திருச்சி மண்டலக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணை 2005 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[2] இதன் மொத்தக் கொள்ளவு 87.23 மில்லியன் கன அடியும், உயரம் 22.97 அடியுமாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மிருகண்டா நதி அணை திறப்பு". தமிழ் இந்து திசை. https://www.hindutamil.in/news/todays-paper/regional04/617558--1.html. பார்த்த நாள்: 9 November 2023. 
  2. "தமிழக நீர்த்தேக்கங்கள்" (PDF). நீர்வளத் துறை. பார்க்கப்பட்ட நாள் 9 November 2023.
  3. "வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் வெளியேற்றம் 17 ஏரிகளுக்கு நீர்வரத்து மிருகண்டா அணையில் இருந்து". தினகரன். https://www.dinakaran.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-204-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0/. பார்த்த நாள்: 9 November 2023. 

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருகண்டா_அணை&oldid=3824328" இலிருந்து மீள்விக்கப்பட்டது