பாரதிய ஜன சங்கம் (Bhartiya Jan Sangh)(அல்லது சுருக்கமாக இந்தியில் ஜன் சங்) 1951 முதல் 1977 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும்.[1] இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. 21 அக்டோபர் 1951 அன்று தில்லியில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்னும் ஆர். எஸ். எஸ் உடன் கலந்தாலோசித்து சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. 1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாமா பிரசாத் முகர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.