பங்காரு லட்சுமண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்காரு லட்சுமண்
மத்திய இராஜாங்க அமைச்சர், இரயில்வே துறை
பதவியில்
1999–2000
தேசியத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2000–2001
முன்னவர் குஷபாவு தாக்கரே
பின்வந்தவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 17, 1939(1939-03-17)
ஆந்திரப் பிரதேசம்இந்தியா
இறப்பு 1 மார்ச்சு 2014(2014-03-01) (அகவை 74)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சுசீலா
பிள்ளைகள் 3 மகன்களும் ஒரு மகளும்
சமயம் இந்து

பங்காரு லட்சுமண் (மார்ச் 17, 1939 – மார்ச் 1, 2014[1]) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒர் இந்திய அரசியல் பிரமுகர். இவர் இந்திய அரசின் இரயில்வே துறை அமைச்சராக 1999-2000 ஆண்டுகளில் இருந்துள்ளார். அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான இவருக்கு, தெகல்கா ஊழல் வழக்கின் காரணமாக நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.[2]

தனி வாழ்க்கை[தொகு]

இவர் ஆந்திராவின் மடிகா தலித் இனத்தவர், ஐதராபாத்தில் இளங்கலையும் சட்டமும் பயின்றவர். இவருடைய துணைவியாரான சுசீலா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் தொகுதியிலிருந்து 14-வது மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BJP leader Bangaru Laxman passes away". டி.என்.ஏ. 1 மார்ச் 2014 மாலை 6 மணி. 1 மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. "Bangaru Laxman sent to 4 years in jail". டி.என்.ஏ. 29 ஏப்ரல் 2012. 1 மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்காரு_லட்சுமண்&oldid=3676772" இருந்து மீள்விக்கப்பட்டது